நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் |
'உருமி' படத்தை தொடர்ந்து பிருத்விராஜ், ஆர்யா இருவரும் மலையாளத்தில் இணைந்து நடித்துவரும் படம் 'டபுள் பேரல்'.. 2013ல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய 'ஆமென்' படத்தை இயக்கிய லிஜோ ஜோஸ் பள்ளிசேரி தான் இந்தப்படத்தை இயக்குகிறார். இந்த ஸ்டார் ஹீரோக்களுடன் பிருத்விராஜின் சகோதரர் இந்திரஜித், ஆசிப் அலி மற்றும் சன்னிவெய்ன் ஆகியோரும் நடிப்பதால், இது அக்மார்க் மல்டி ஸ்டாரர் படமாக உருவாகி வருகிறது.
இந்தப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக விரைவில் ரோடு ஷோ ஒன்றை நடத்த தீர்மானித்திருக்கிறார்களாம்.. அதாவது இந்த ஐந்து நடிகர்களும் இந்தப்படத்தில் தாங்கள் நடிக்கும் அதே காஸ்ட்யூமுடன் லைவ்வாக திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை பயணிக்க இருக்கிறார்களாம். இந்த பயணத்தின்போது இந்த ஐந்து ஹீரோக்களின் ரசிகர்களும் இதில் பங்கேற்று, இந்த சாலையில் உள்ள முக்கியமான இடங்களில் இந்த டீமுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து பிரமாதப்படுத்த இருக்கிறார்களாம்.