‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மத்திய திரைப்பட தணிக்கை குழு தலைவர் லீசா சாம்சன் மற்றும் 9 உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள். தணிக்கை குழு விவகாரங்களில் அரசு தலையிடுவதாக குற்றம் சாட்டினர். இந்த நிலையில் அவர்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டு மத்திய அரசு, மத்திய தணிக்கை குழுவின் புதிய தலைவராக பிரபல தயாரிப்பாளர் பசுலாஜ் நிஹாணியை நியமித்துள்ளது.
அதேபோல ராஜினாமா செய்த உறுப்பினர்களுக்கு பதிலாக புதிய உறுப்பினர்களை நியமனம் செய்துள்ளது. இதில் தமிழ் நாட்டைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகரும், ஆந்திராவைச் சேர்ந்த நடிகை ஜீவிதாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இருவருமே சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் தவிர இந்தி கதாசிரியர் மிஹிர் புடா, நடிகர் ஜார்ஜ் பேகர், வாணி திரிபாதி, அசோக் பண்டிட், சந்திரசேகர் பிரசாத், சையது அப்துல், ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூன்று ஆண்டுகள் இந்த பதவியில் இருப்பார்கள்.