‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கர்நாடக இசை பாடகிகளுள் முன்னணியில் உள்ள சுதா ரகுநாதன், வசந்த் இயக்கத்தில் வெளியாகும் படத்தின் மூலம், இசையமைப்பாளர் அவதாரம் எடுக்கிறார்.
இயக்குனர் வசந்த் இயக்கும் புதிய படத்தின் தலைப்பு 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்'. அன்றாட வாழ்வில் ஒரு பெண் சந்திக்கும் பிரச்சினைகளை உள்ளடக்கிய படமாக தயாராகிறது. இப்படத்தில் பத்மபிரியா மற்றும் கருணாகரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் மூலம் பிரபல கர்நாடக சங்கீத பாடகி சுதா ரகுநாதன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
பத்மபிரியா, வசந்துடன் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் இதுவாகும். ஏற்கெனவே, வசந்த் இயக்கத்தில் 'சத்தம் போடாதே' என்ற படத்தில் பத்மபிரியா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.