போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்துள்ள 'ஐ' திரைப்படம் கொடுத்துக் கொண்டிருக்கும் வரவேற்பைப் பார்த்து சில தெலுங்குத் திரையுலகினர் கடும் எரிச்சலில் உள்ளனர். சில சிறிய தயாரிப்பாளர்கள் அவர்களுடைய படங்களை 'ஐ' திரைப்படம் வெளியான காரணத்தால் திரையிட முடியவில்லை என ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
பவன் கல்யாண், வெங்கடேஷ் நடித்து வெளிவந்த 'கோபாலா கோபாலா' படத்தின் வசூல் கூட 'ஐ' படத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு விட்டதாம். இத்தனைக்கும் 'ஐ' படத்தைப் பார்த்துவிட்டு வரும் ரசிகர்கள் படத்தைப் பற்றி நெகட்டிவ் கமெண்ட் கொடுத்தாலும் படத்தின் வசூல் அவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளதாம். இதுவரை ஆந்திரா, தெலுங்கானா இரு மாநிலங்களில் மட்டும் மூன்று நாட்களில் 'ஐ' திரைப்படம் சுமார் 22 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கிறதாம். ஆனால், 'கோபாலா கோபாலா' திரைப்படம் ஒரு வாரத்தில் 30 கோடி ரூபாய் வரைதான் வசூல் செய்துள்ளதாம்.
ஒரு டப்பிங் படம் இந்த அளவிற்கு வசூல் செய்திருப்பதை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் இருக்கிறது. எதிர்வரும் காலங்களில் டப்பிங் படங்களுக்கு சில பல தடைகளை ஏற்படுத்த வேண்டும் என்று ஒரு சிலர் தெலுங்கில் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளார்களாம்.