ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
ஊர்களின் பெயர்களில் படங்களை எடுத்து ஊரரசு என்று அழைக்கப்பட்டு வருபவர் டைரக்டர் பேரரசு. அந்த வகையில், திருப்பதி, சிவகாசி, தர்மபுரி, திருத்தணி, பழனி, திருவண்ணாமலை போன்ற படங்களை இயக்கிய இவர், தற்போது திகார் என்ற படத்தை தமிழ், மலையாளத்தில் இயக்கியிருக்கிறார். அதோடு, திகார் ஜெயிலில் பணியாற்றிய கிரண்பேடியை அப்படத்தின் ஆடியோ விழாவுக்கு சென்னைக்கு அழைத்து வந்தும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆனால், அவர் படத்தை வெளியிடும் நேரத்தில் முக்கிய ஹீரோக்களின் படங்கள் திரைக்கு வரத் தொடங்கியதால் சரியான நேரம் பார்த்து வெளியிட வேண்டும் என்று காத்திருக்கிறார் பேரரசு. அதோடு, திகார் படத்தின் வெற்றி தோல்விகளை எதிர்பார்த்து காத்திருக்க விரும்பாமல், தனது அடுத்த பட வேலைகளிலும் தற்போது அவர் இறங்கிவிட்டார்.
அந்த வகையில், இந்த புதிய படமும் அவரது வழக்கமான பாணியில் ஒரு அதிரடியான ஆக்சன் கதையில்தான் தயாராகிறதாம். ஒரு பிரபலமான ஊரின் பெயரில்தான் அந்த படத்திற்கும் அவர் டைட்டில் வைக்க இருப்பதாகவும் கூறப்படும் அதே வேளையில், பேரரசு இயக்கும் புதிய படத்திலும் திகார் படத்தைப்போன்று புதுமுகங்களே நடிக்கிறார்களாம்.