அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு |
2015ம் ஆண்டில் இந்தியத் திரையுலகம் மட்டுமல்லாது திரைப்படங்களை நேசிக்கும் உலக நாடுகளில் உள்ள பல திரையுலகத்தினரும் ரசிக்கும் விதத்தில் இரண்டு தென்னிந்தியப் படங்கள் இடம் பெறப் போகின்றன. இந்தியப் படங்கள் என்றாலே இந்திப் படங்கள்தான் என்ற பிம்பத்தை அந்த இரண்டு இயக்குனர்களும் நிச்சயம் உடைத்தெறியப் போகிறார்கள். இருவரின் கற்பனை வளங்களும் எல்லையில்லாமல் சிறகை விரித்துப் பறக்கும்படியான அமைந்ததால் இருவரின் இயக்கத்தில் வெளிவர உள்ள படங்கள் நிச்சயம் பேசப்படும் படங்களாக அமைய உள்ளன.
சில தினங்களுக்கு முன் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஐ' படத்தின் புத்தம் புதிய டிரைலர் தமிழ்த் திரையுலகிலும், தெலுங்குத் திரையுலகிலும் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. நேற்று ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் 'பாகுபலி' படத்தின் புதிய மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அந்தப் படத்திற்காக அவர்கள் எப்படியெல்லாம் உழைத்து வருகிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் அந்த வீடியோ, திரைப்பட ரசிகர்களிடையேயும், திரையுலகத்தினரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அதைப் பார்க்கும் போது ஒரு ஆங்கிலப் படத்தின் மேக்கிங் வீடியோவைப் பார்த்த உணர்வே ஏற்பட்டது. இயக்குனர் ஷங்கர் இன்னும் அவருடைய 'ஐ' படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிடவில்லை.
தமிழ்நாட்டில் உள்ள திரைப்பட ரசிகர்களும், ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள திரைப்பட ரசிகர்களும் 'ஷங்கர், ராஜமௌலி' ஆகியோரால் அடுத்த ஆண்டு தென்னிந்தியத் திரையுலகம் பெரும் வளர்ச்சியைப் பெறும் என்று நம்புகிறார்கள். தென்னிந்தியத் திரையுகின் கலைஞர்கள் என்பதையும் மீறி இந்தியத் திரையுலகின் அடையாளமாக அவர்களிருவரையும் பேசும் காலம் விரைவில் வரும்.