போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் சில மாதங்களுக்கு முன் வீசிய ஹுட் ஹுட் புயலால் பெரும் சேதம் ஏற்பட்டது. பல கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் தெலுங்கு திரையுலகத்தை சேர்ந்த பலரும் தனித் தனியாக பல லட்சங்கள் நிவாரண நிதியை அப்போதே வழங்கினர். தொடர்ந்து தெலுங்குத் திரையுலகத்தினர் கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி பத்து கோடி ரூபாய்க்கும் மேல் நிவாரண நிதியாக வழங்கினர்.
தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த சூர்யா, கார்த்தி, விஷால், விஜய் ஆகியோரும் நிவாரண நிதிகளை வழங்கினர். சூர்யா குடும்பத்தினர் சார்பாக மொத்தமாக 50 லட்சமும், விஷால் சார்பாக 15 லட்ச ரூபாயும், விஜய் 5 லட்ச ரூபாயும், ஆந்திர முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கியிருந்தனர். சென்னையைச் சேர்ந்த நடிகை சமந்தா 10 லட்ச ரூபாய் வழங்கியிருந்தார்.
இதனிடையே, கடந்த வாரம் ஹைதராபாத்தில் நடைபெற்ற 'லிங்கா' பட விழாவில் பேசிய ரஜினிகாந்த் சென்னைக்குச் சென்றதும் புயல் நிவாரண நிதியை வழங்குவதாகத் தெரிவித்திருந்தார். அதன் படி கடந்த 10 நாட்களுக்கு முன்பே 'ஸ்ரீ ராகவேந்திரா பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட்' மூலம் ஆந்திர முதல்வரின் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாயை வரைவோலையாக அனுப்பியிருக்கிறார். இது பற்றிய தகவல் நேற்றுதான் வெளியானது.