பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... |
தமிழில் உதயன், சகுனி படங்களில் நடித்தவர் ப்ரணிதா. கன்னட நடிகையான இவருக்கு பின்னர் இங்கு பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வந்தார். தெலுங்கில் அவர் நடித்த அத்திரின்டிக்கி தாரடி என்ற படம் ஹிட்டாக அமைந்ததால், பல படங்கள் அவருக்கு கமிட்டாகின.
ஆனால், திரிவிக்ரம் என்ற இயக்குனரின் ஒரு படத்தில் நடித்தபோது ஸ்பாட்டில் அவருக்கும் , ப்ரணிதாவுக்கு லடாய் ஏற்பட்டு விட்டதாம். அதனால் அந்த படத்தில் இருந்தே விலகி விட்டாராம் ப்ரணிதா. அதனால் அந்த படத்தில் இப்போது நித்யாமேனன் நடித்து வருகிறாராம். மேலும், நாகார்ஜூனாவுடன் நடிக்க ஒரு பட வாய்ப்பு வந்தபோதும் அதை ஏற்க மறுத்து விட்ட ப்ரணிதா, தமிழில் மாஸ் படத்தில் நடிப்பதையடுத்து புதிய படங்களை கைப்பற்றி முழுவீச்சில் இறங்கியிருக்கிறார்.
மேலும், தமிழில் இவர் இறக்குமதியானபோது ஏகபபட்ட எதிர்பார்ப்பு இருந்தது. அடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகி விடுவார் என்றெல்லாம்கூட பேசப்பட்டார் ப்ரணிதா. அப்போது அது பொய்யாகி விட்டது. ஊனல், இந்த முறை அப்படி விடமாட்டேன். தமிழில் முன்னணி நடிகையாகாமல் பெங்களூருக்கு திரும்ப மாட்டேன் என்று சவாலாக பேசிக்கொண்டு வருகிறார் ப்ரணிதா.