'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |
பட்டாளம், எப்படி மனசுக்குள் வந்தாய், சுண்டாட்டம் உள்பட சில படங்களில் நடித்தவர் இர்பான். சின்னத்திரையில் கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி ஆகிய தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். தற்போது பொங்கி எழு மனோகரா, ரு ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இதில் பொங்கி எழு மனோகரா படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார் இர்பான்.
இதுபற்றி அவர் கூறுகையில், இதற்கு முன்பு நான் நடித்த படங்களிலும் நான் அதிக எதிர்பார்ப்புடன்தான் நடித்தேன். ஆனால் அந்த படங்கள் சரியான விளம்பரம் இல்லாததால் எதிர்பார்த்தபடி மக்களை சென்றடையவில்லை. ஆனால் இந்த பொங்கி எழு மனோகரா படத்தை பொறுத்தவரை நல்ல பப்ளிசிட்டி செய்கிறார்கள்.
அதோடு, இந்த படமும் இப்போதைய ரசிகர்கள் விரும்பும்படியான கதையில் உருவாகியிருப்பதால் கண்டிப்பாக எனக்கு இது முதல் வெற்றி படமாக அமையும் என்று உறுதியாக நம்புகிறேன். மேலும், இப்படத்தில் சிங்கம்புலி எனது நண்பனாக காமெடி வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் காமெடிக்காக அவர் நிறைய உழைத்திருக்கிறார். அதனால் கதை மட்டுமின்றி காமெடியும் ரசிகர்களை கவரும் என்று சொல்லும் இர்பான், இந்த படத்திற்கு பிறகு ஜனரஞ்சகமான ஹீரோவாகி விடுவேன் என்கிறார்.
இப்படி இர்பான் அதிகமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பொங்கி எழு மனோகரா படம், டிசம்பர் மாதமே வெளியிட திட்டமிடப்பட்டிருநதது. ஆனால், ரஜினியின் லிங்கா டிசம்பர் 12ந்தேதி வருவது உறுதியானதோடு, அடுத்து பொங்கலுக்கு அஜீத்தின் என்னை அறிந்தால், ஷங்கரின் ஐ படமும் வெளியாக இருப்பதால், அந்த பிரமாண்ட படங்களுக்கு நடுவே இப்படம் சிக்கினால் காணாமல் போய்விடும் என்பதால்., இப்போது ரிலீஸ் தேதியை ஜனவரி மாதம் 30ந்தேதிக்கு மாற்றி வைத்துள்ளனர்.




