ரஜினி, கமலை இணைத்து படம் : முயற்சித்த லோகேஷ் | சம்பளத்தை உயர்த்த மாட்டேன் : சசிகுமார் உறுதி | அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி : பார்த்திபன் கலகலப்பு | ராம் சரணுக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக வழங்கிய இங்கிலாந்து ரசிகர்கள் | சந்தான பட சர்ச்சை பாடல்: என்ன பிரச்னை? பாட்டில் அப்படி என்ன இருக்கிறது? | அடுத்தடுத்து இரண்டு 200 கோடி படங்கள் : கேக் வெட்டி கொண்டாடிய மோகன்லால் | கோவிந்தா பாடல்... சந்தானத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு : ரூ.100 கோடி நஷ்ட கேட்டு நோட்டீஸ் | கேரளாவில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு : ரஜினியைப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் | மகன் படத்தில் பாடுவாரா விஜய்? | திரையுலகில் 50வது ஆண்டு: பாரதரத்னா விருது பெறுவாரா இளையராஜா? |
பட்டாளம், எப்படி மனசுக்குள் வந்தாய், சுண்டாட்டம் உள்பட சில படங்களில் நடித்தவர் இர்பான். சின்னத்திரையில் கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி ஆகிய தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். தற்போது பொங்கி எழு மனோகரா, ரு ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இதில் பொங்கி எழு மனோகரா படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார் இர்பான்.
இதுபற்றி அவர் கூறுகையில், இதற்கு முன்பு நான் நடித்த படங்களிலும் நான் அதிக எதிர்பார்ப்புடன்தான் நடித்தேன். ஆனால் அந்த படங்கள் சரியான விளம்பரம் இல்லாததால் எதிர்பார்த்தபடி மக்களை சென்றடையவில்லை. ஆனால் இந்த பொங்கி எழு மனோகரா படத்தை பொறுத்தவரை நல்ல பப்ளிசிட்டி செய்கிறார்கள்.
அதோடு, இந்த படமும் இப்போதைய ரசிகர்கள் விரும்பும்படியான கதையில் உருவாகியிருப்பதால் கண்டிப்பாக எனக்கு இது முதல் வெற்றி படமாக அமையும் என்று உறுதியாக நம்புகிறேன். மேலும், இப்படத்தில் சிங்கம்புலி எனது நண்பனாக காமெடி வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் காமெடிக்காக அவர் நிறைய உழைத்திருக்கிறார். அதனால் கதை மட்டுமின்றி காமெடியும் ரசிகர்களை கவரும் என்று சொல்லும் இர்பான், இந்த படத்திற்கு பிறகு ஜனரஞ்சகமான ஹீரோவாகி விடுவேன் என்கிறார்.
இப்படி இர்பான் அதிகமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பொங்கி எழு மனோகரா படம், டிசம்பர் மாதமே வெளியிட திட்டமிடப்பட்டிருநதது. ஆனால், ரஜினியின் லிங்கா டிசம்பர் 12ந்தேதி வருவது உறுதியானதோடு, அடுத்து பொங்கலுக்கு அஜீத்தின் என்னை அறிந்தால், ஷங்கரின் ஐ படமும் வெளியாக இருப்பதால், அந்த பிரமாண்ட படங்களுக்கு நடுவே இப்படம் சிக்கினால் காணாமல் போய்விடும் என்பதால்., இப்போது ரிலீஸ் தேதியை ஜனவரி மாதம் 30ந்தேதிக்கு மாற்றி வைத்துள்ளனர்.