என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 170 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரம், நெல்லை, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் நடந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற உள்ளது. இந்த படப்பிடிப்பில் ரஜினி - அமிதாப்பச்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகிறது. இதற்காக நேற்று ரஜினி 170 வது படத்தின் படக்குழு மும்பை புறப்பட்டு சென்றது. அப்போது மும்பை விமான நிலையத்தில் ரஜினியை கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் சந்தித்துள்ளார். ரஜினியுடன் இணைந்து தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள இர்பான், இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினி மிகவும் எளிமையான மனிதராக உள்ளார். அவருடனான இந்த சந்திப்பு எனக்கு சில படிப்பினையை தந்துள்ளது என்று தெரிவித்திருக்கிறார். இவர் தமிழில் விக்ரம் நடித்த கோப்ரா படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.