பிப்-20ல் வெளியாகும் பிரியாமணி மலையாள படம் | எனக்கு அரெஸ்ட் வாரண்டா ? பொய் பரப்புவோர் மீது சோனு சூட் காட்டம் | ஆஸ்தான நடிகரையும் மோகன்லால் படத்தில் இணைத்துக் கொண்ட ஆவேசம் இயக்குனர் | வேட்டையன் படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்தேன் ; மலையாள நடிகர் அலான்சியர் லே | பிரதமர் மோடிக்கு நடன பொம்மைகளை பரிசளித்த நாகசைதன்யா - சோபிதா தம்பதி | தமிழில் வெப் தொடர் அறிமுகமாகிறார் ஜான்வி கபூர்! | போர் தொழில் இயக்குனரின் கதையில் அசோக் செல்வன்! | டாக்சிக் படத்தின் புதிய அப்டேட்! | பாலகிருஷ்ணாவிற்கு வில்லனாக ஆதி! | சிம்புவிற்கு ஜோடியாகும் சாய் பல்லவி! |
நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 170 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரம், நெல்லை, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் நடந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற உள்ளது. இந்த படப்பிடிப்பில் ரஜினி - அமிதாப்பச்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகிறது. இதற்காக நேற்று ரஜினி 170 வது படத்தின் படக்குழு மும்பை புறப்பட்டு சென்றது. அப்போது மும்பை விமான நிலையத்தில் ரஜினியை கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் சந்தித்துள்ளார். ரஜினியுடன் இணைந்து தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள இர்பான், இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினி மிகவும் எளிமையான மனிதராக உள்ளார். அவருடனான இந்த சந்திப்பு எனக்கு சில படிப்பினையை தந்துள்ளது என்று தெரிவித்திருக்கிறார். இவர் தமிழில் விக்ரம் நடித்த கோப்ரா படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.