சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி |
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் ரஜினிகாந்த். தற்போது ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புக்காக மும்பையில் உள்ளார். இதில் அமிதாப் பச்சன் நடிப்பதால் 33 ஆண்டுகள் கழித்து அவருடன் நடிக்கும் மகிழ்ச்சியை அவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, மகிழ்ச்சியை பதிவிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதில் அரசியல் மற்றும் திரைத்துறையை சார்ந்த பல பிரபலங்கள் பங்கேற்றனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதா கிருஷ்ணன், முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, சகோதரி செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மூத்த நடிகை லதா, மீனா, நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
விருந்தினர்களை ரஜினியின் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.