போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
கொஞ்ச நாட்களாகவே சுப்ரமணியபுரம் சசிக்குமார் பற்றி ஒரு செய்தியும் வரவில்லையே, ஏன்? வேறொன்றுமில்லை, தனது நகரம் படத்தில் மும்முரமாக இருக்கிறார் அவர். பாடல் வெளியீட்டு விழாவுக்கு அழைத்தால் போதும். ஓடோடி வருகிற பட்டியலில் முதலில் அமீரும், அடுத்து அவரது சிஷ்யனுமான இவரும்தான் இருப்பார்கள். இப்போது இருவருமே பிசி. இந்த இடத்தை இப்போது பார்த்திபன் ஃபில்லப் செய்கிறார் என்பது தனி ஆறுதல். எப்பவுமே சொந்த சரக்கு இருப்பவர்களுக்குதான் சல்யூட் அடிக்கும் தமிழ்சினிமா. சுப்ரமணியபுரம், நாடோடிகள் ஆகிய இரண்டே படத்தில் தனது சரக்கை நிருபித்தவர் சசிகுமார். என்ன காரணத்தாலோ சொந்த சரக்கை சாக்கு மூட்டையில் கட்டிவிட்டு இரவலில் இறங்கியிருக்கிறாராம் சசி. இப்படி ஒரு தகவலை கோடம்பாக்கத்தில் உலவ விடுவது யார் என்பதெல்லாம் இருக்கட்டும். 'ஹேரி பிரவுண்' என்ற படத்தைதான் 'நகரம்' என்ற பெயரில் படமாக்கி வருகிறாராம் அவர். ஆனால் அந்த படத்தை அப்படியே 'அடிக்காமல்' நம்ம ஊர் ஸ்டைலுக்கு மாற்றியிருக்கிறார் என்கிறது உப தகவல். போகட்டும். இன்னொரு சுவாரஸ்யமான செய்தி. விக்ரமுடன் நடிக்கப் போகிறோம் என்ற சந்தோஷத்தில் இருந்த சுப்ரமணியபுரம் நாயகி ஸ்வாதி அந்த படமே டிராப் ஆனதால் அதிர்ந்து போயிருக்கிறார். மீண்டும் ஒரு ஓப்பனிங் கொடுங்க என்று அவர் வந்திறங்கியிருக்கிற இடம் சசியின் ஆபிஸ்.