‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படம் பொங்கலுக்கு வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், திரைப்படத்துறையிலும் விநியோகஸ்தர்கள் மத்தியிலும் ஐ படம் பொங்கலுக்கு வெளிவருமா என்ற சந்தேகம் நிலவுகிறது.
ஐ படத்தின் மீது பல கோடி ரூபாய் வங்கியில் கடன் வாங்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொகையை செலுத்தினால்தான் ஐ படத்தை வெளியிட வங்கியிலிருந்து க்ளியரன்ஸ் கிடைக்கும் என்கிறார்கள். தயாரிப்பாளர் தரப்பிலோ ஐ படம் பொங்கலுக்கு உறுதி என்று சொல்லப்படுகிறது.
பொங்கலுக்கு முன்பே அதாவது ஜனவரி 9ஆம் தேதியே ஐ படத்தை உலகமெங்கும் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம். அதோடு, ஐ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை மதுரை அழகர் ஃபிலிம்ஸ் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது என்றும், கோவை ஏரியாவின் திரையரங்க வெளியீட்டு உரிமையை மட்டும் காஸ்மோ ஃபிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது என்றும் சொல்கிறார்கள். கௌதம் மேனன் இயக்கும் அஜித் நடிக்கும் என்னை அறிந்தால் படம் ஜனவரி 8ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.