தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவில் போராடி ஜெயித்தவர்களில் அஜீத் குறிப்பிடத்தக்கவர். அவரையடுத்து சிவகார்த்திகேயன், விஜயசேதுபதி உள்பட சில நடிகர்களும் இந்த பட்டியலில் இடம்பிடிக்கின்றனர். இப்படி தனித்து போராடி ஜெயித்த இவர்கள் சினிமா விழாக்களுக்கு செல்லும்போது, அவர்களைப்பற்றி பெருமையாக பேசுவதாக கருதி சிலர், இவர்களெல்லாம் சினிமாவில் ரொம்ப கஷ்டப்பட்டு வந்தவர்கள் என்று முன்னுதாரணமாக சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஆனால், இப்படி விஜயசேதுபதியைப்பற்றி யாராவது சொன்னால், கஷ்டப்பட்டு முன்னேறினார். உயிரைக்கொடுத்து நடித்தார் என்றெல்லாம் பேச வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறார் அவர். காரணம், கஷ்டப்பட்டால்தான் எந்த துறையாக இருந்தாலும் ஜெயிக்க முடியும். அதோடு, வன்மம் படத்தில் நான் உயிரைக்கொடுத்து நடித்ததாக சொல்கிறார்கள்.
அந்த கதைக்கு எப்படி தேவைப்பட்டதோ அதற்காக ரிஸ்க் எடுத்து நடித்தேன். அது எனது கடமை. கஷ்டப்பட்டு நடித்தால்தான் வெற்றி என்கிற இலக்கை அடைய முடியும். அதனால் எதையுமே நான் கஷ்டமாக நான் நினைக்கவில்லை. நினைப்பதும் தவறு. அதனால், நான் கஷ்டப்பட்டு வளர்ந்ததாக, நடித்ததாக யாரும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறார் விஜயசேதுபதி.