‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கமல், ரஜினி காலத்தில் அவர்கள் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். 99 படங்களில் நடித்த பிறகு தன் 100 ஆவது படமான ராஜபார்வை படத்தின் மூலம்தான் கமல் தயாரிப்பாளர் ஆனார். ரஜினியோ வள்ளி என்ற படத்தில்தான் தயாரிப்பாளர் ஆனார். இப்போது உள்ள கதாநாயகன்கள் ஒரு சில படங்களில் நடித்த நிலையிலேயே சொந்தப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களில் விஜய்சேதுபதியும் ஒருவர். கடந்த ஆண்டு சங்குதேவன் என்ற படத்தை சொந்தமாக தயாரிப்பதாக அறிவித்த விஜய்சேதுபதி, பின்னர் அந்தப்படத்தை ட்ராப் பண்ணினார். தற்போது ஆரஞ்சுமிட்டாய் என்ற படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து, மேற்கு தொடர்ச்சி மலை என்ற படத்தைத் தயாரிக்கிறார்.
விஜய் சேதுபதியும், இளையராஜாவும் இந்தப் படத்தில் இணைகிறார்கள். மேற்கு தொடர்ச்சி மலை படத்தை விஜய் சேதுபதி தயாரிக்கிறாரே தவிர இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை. இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது நடந்து வருகிறது. இப்போது மெல்லிசை, புறம்போக்கு, இடம் பொருள் ஏவல், ஆரஞ்சு மிட்டாய் என பல படங்களில் நடித்து வரும் விஜய்சேதுபதி, இப்படத்தை அடுத்து நானும் ரௌடிதான் என்ற படத்தில் நயன்தாரா உடன் நடிக்கிறார். தயாரிப்பு தனுஷ்.