‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
""நடிகர் சங்கத்தையும், சங்க நிர்வாகிகளையும் அவதூறு பேசினால், நடிகர் விஷாலை, சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
திருச்சியில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தென்னிந்திய நடிகர் சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நடிகர் சங்கக் கடனை அடைப்பதில், விஜயகாந்த், ராதாரவி மற்றும் எனக்கும் (சரத்குமார்) பெரும் பங்கு உண்டு. அப்போது, இல்லாதவர்கள், தற்போது நடிகர் சங்க நிர்வாகிகளை குறை கூறுகின்றனர். தற்போது உள்ள, 3.50 கோடி ரூபாயை வைத்துக் கொண்டு, நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்து வருகிறோம்.
நடிகர் சங்க இடத்தில், சினிமா துறையில் அனுபவம் உள்ள சத்தியம் நிறுவனத்துக்கு கட்டிடம் கட்ட அனுமதியளித்தோம். 29 ஆண்டு, 11 மாதங்களுக்கு பின், நடிகர் சங்கத்தின் சொத்து மதிப்பு, 170 கோடி ரூபாயாக இருக்கும். பொதுக்குழுவில் அனுமதி பெற்றுத்தான், கட்டிடம் கட்ட அனுமதி அளித்தோம். நடிகர் சங்கத்தில் இருந்து, ஒரு பிடி மண்ணைக் கூட, யாரும் எடுத்து செல்ல முடியாது.
"விஸ்வரூபம் பட பிரச்னையில், நடிகர் சங்கம் உதவி செய்யவில்லை என, விஷால் கூறி வருகிறார். ஆனால், நான், ராதாரவி ஆகியோர், கமல் வீட்டில் இரவு, 1 மணி வரை இருந்து பிரச்னையை பேசினோம். பூச்சி முருகன் என்பவருக்கு பதவி தரவில்லை. அதனால், அவர், நடிகர் சங்க நிர்வாகிகள் மீது குறை கூறி வருகிறார். நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளார்.
அவருக்கு, விஷால் எடுத்து சொல்ல வேண்டும். விஷால், எனக்கு நோட்டீஸ் அனுப்புவதாக கூறுவது சரியில்லை. தொடர்ந்து, நடிகர் சங்கம் பற்றியும், நிர்வாகிகள் பற்றியும் அவதூறு பேசி வருகிறார். இதை, அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், விஷாலை, நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.