போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடித்துள்ள லிங்கா படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கி உள்ளார். இந்த படத்தின் கதையை, கர்நாடகத்தைச் சேர்ந்த பொன் குமரன் எழுதியுள்ளார். லிங்கா படப்பிடிப்புகள் முடிந்து டிசம்பர் மாதம் வெளியிட தீவிரமான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் லிங்கா படத்தின் கதை என்னுடையது என்று மதுரையைச் சேர்ந்த ரவிரத்தினம் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையொட்டி இயக்குனர் ரவிகுமார், கதாசிரியர் பொன்குமார் உள்ளிட்ட படம் சம்பந்தப்பட்ட பலருக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது.
இதுதொடர்பாக ரஜினி தரப்பில் இன்று ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில் லிங்கா படத்தின் கதையை திருடியதாக கூறப்படும் செய்தி பொய்யானது. இப்படத்தில் நான் நடிகர் மட்டும் தான் தயாரிப்பாளரோ, விநியோகஸ்தரோ கிடையாது. என் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கவே இப்படி ஒரு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர் என்று கூறியுள்ளார். இதனையடுத்து வழக்கு நவ.,24ம் தேதி நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.