‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
வெளுத்துக்கட்டு படத்தில் அறிமுகமானவர் அருந்ததி. அதையடுத்து, போடி நாயக்கனூர் கணேசன, சுண்டாட்டம், நேற்று இன்று என அவர் நடிப்பில் பல படங்கள் வெளியானபோதும் எந்த படமும் அவருக்கு பிரேக் கொடுக்கவில்லை. இந்த நிலையில், தற்போது அவர் நடிப்பில் நாய்கள் ஜாக்கிரதை, தொட்டால் தொடரும் என்ற இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ளன. தவிர வி.சேகர் இயக்கத்தில் நடித்துள்ள சரவண பொய்கை என்ற படம் பற்றிய செய்தியே தெரியவில்லை.
இந்த நிலையில், சமீபத்தில், சிபிராஜூடன் நடித்துள்ள நாய்கள் ஜாக்கிரதை படத்தின் பிரஸ்மீட்டில் கலந்து கொண்ட அருந்ததி. அந்த படத்தில் தனக்கு பாடலே இல்லை என்று புலம்பியபோதும், நான் இதுவரை நடித்த படங்களில் இதுதான் சிறந்த படம் என்பது போல் பேசினார். இதனால் அவரை வைத்து ஏற்கனவே படம் இயக்கியுள்ள டைரக்டர்கள் டென்சனாகி உள்ளனர்.
அதில், ஒரு டைரக்டர், அருந்ததிக்கு என் படத்தில்தான் முக்கியத்துவம் வாய்ந்த வேடம் கொடுத்திருக்கிறேன். அவரைச்சுற்றித்தான் மொத்த கதையும் பயணிக்கிறது. அதைப்பார்த்து விட்டுத்தான அவருக்கு மேற்கொண்டு படங்களே புக்காகும் என்று கூறுபவர், தான் நடித்ததில் சிறந்த படம் என்று அவர் சொல்லும் படத்தில் நாயைச்சுற்றித்தான் கதையே நகர்கிறது. மேற்படி நடிகைகூட அந்த படத்தில் ஒரு கேரக்டரில்தான் நடித்துள்ளார். ஒரு பாட்டுகூட இல்லேன்னா அது கேரக்டர் ரோல்தானே என்று தனது டென்சனை வெளிப்படுத்துகிறார்.
ஆக, ஒரு டைரக்டரை சந்தோசப்படுத்த நினைத்த அருந்ததி, மற்ற டைரக்டர்களின் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார்.