ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
குறுகிய காலத்தில் முதல்வரிசையில் இடம்பிடித்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார்.
தமிழ் சினிமாவில் பிஸியாக இருக்கும் இன்றைய இசை அமைப்பாளர்களில் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும் தனி ஒரு இடம் உண்டு!
தற்போது நான்கைந்து படங்களுக்கு இசை அமைத்து வருவதோடு, படத் தயாரிப்பு, நடிப்பு என பிற துறைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அதிலும் தன்னுடைய முத்திரையை அழுத்தமாக பதிக்க பாடுபட்டு வருகிறார். ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையுலக வாழ்வில் அடுத்த கட்ட முன்னேற்த்தை எட்டியுள்ளார்.
என்ன முன்னேற்றம்? : விரைவில் சிம்போனி இசைக்காக ஜெர்மனி செல்லவிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். சர்வதேச சந்தையில் மிக முக்கியமான ஒரு நுகர்பொருளின் விளம்பரத்துக்காக நான் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளேன். உலக அரங்கில் சோபிக்கும் சில இசை அமைப்பாளர்களுடன் என்னை ஒப்பிட்டு, எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்காக இறைவனுக்கு நன்றி. ஜெர்மனியில் உள்ள Stuttgart என்னும் நகரத்தில் மேற்கொள்ள இருக்கும் இசைப் பதிவுக்காக நான் விரைவில் ஜெர்மனி செல்ல உள்ளேன். இசை உலகில் பிரசித்தி பெற்ற பலர் ஜெர்மனியை சேர்ந்தவர்கள். இவர்களில் மிக முக்கியமானவர் கோன்ராத் பௌமன். இவரது இசை காற்றில் பறந்த ஜெர்மனி நாட்டில் நானும் இசை அமைக்க இருக்கிறேன் என்பதில் எனக்கு பெருமை என்று தெரிவித்திருக்கிறார் ஜி.வி. பிரகாஷ்.