‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
அரண்மணை படத்திற்கு பிறகு சுந்தர்.சி இயக்கும் படம் ஆம்பள, விஷால், ஹன்சிகா, ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண், சந்தானம் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் இதுவரை எந்த ஹீரோவும் நடிக்காத புதுமையான கேரக்டரில் நடிக்கிறார் விஷால். அது அரசியல் புரோக்கர்.
எந்தகட்சிக்கு வேண்டுமானாலும் மாநாடு பொதுக்கூட்டத்துக்கு கொடி பிடிக்க, கோஷம்போட தொண்டர்கள் வேண்டும் என்றால் விஷாலை அணுகினால், அவர்கள் கேட்கும் ஆட்களை ஆயிரம் முதல் லட்சம் வரை அனுப்பி வைக்கிற புரோக்கர். பஸ் லாரி வாடகை வருகிறவர்களுக்கு பிரியாணி, குவார்ட்டர் என எல்லாவற்றுக்கு பில்போட்டு வசூலித்துவிடுவாராம். கோஷம்போட எவ்வளவு, ஆர்ப்பாட்டம் பண்ண எவ்வளவு, மறியல் பண்ண எவ்வளவு, தடியடியில் காயம் பட்டால் எவ்வளவு, ஜெயிலுக்கு போனால் எவ்வளவு என்று எல்லாவற்றுக்கும் கட்டணம் நிர்ணயித்து வைத்திருப்பாராம். படம் முழுக்க அரசியல் பன்ஞ்சும் இருக்கிறதாம்.