போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
சில வருடங்கள் முன்னர் வரை தமிழ் சினிமவின் தரமான நடிகர்களுள் ஒருவர் என பெயர் வாங்கியிருந்தவர் ஜெயம் ரவி. அடுத்தடுத்து தொடர்ச்சியாக அவருடைய படங்கள் வெளிவந்து, அவருக்கு குடும்பத்து ரசிகர்களையும், இளம் ரசிகர்களையும் நிறையவே பெற்றுத் தந்தது. இன்றும் அவர் நடித்த படங்களான 'சந்தோஷ் சுப்பிரமணியம், உனக்கும் எனக்கும்' படங்களை தொலைக்காட்சியில் எத்தனை முறை ஒளிபரப்பினாலும் தொடர்ந்து பல பேர் பார்த்து வருகிறார்கள். ஆனால், சமீபத்திய ஜெயம் ரவி படங்களுக்கு ஒரு ஆரோக்கியமான நிலைமை இல்லாமல் இருக்கிறது. இதற்கு முன் அவர் நடித்து வெளிவந்த 'நிமிர்ந்து நில்' படம் கூட பல தடைகளைக் கடந்துதான் வெளிவந்தது.
தற்போது அவர் நடித்து முடித்துள்ள 'பூலோகம்' படம் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்ட பின்னும் பல மாதங்களாக வெளியாகாமலே உள்ளது. அவருடைய அண்ணன் ராஜா இயக்கத்தில், நயன்தாராவுடன் 'தனியொருவன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர சுராஜ் இயக்கத்தில் அஞ்சலி, த்ரிஷாவுடனும் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். லட்சுமணன் இயக்கத்தில் ஹன்சிகாவுடன் 'ரோமியோ ஜுலியட்' படத்திலும் நடித்து வருகிறார்.
'பேராண்மை' படத்திற்குப் பிறகு வெளிவந்த “தில்லாலங்கடி, எங்கேயும் காதல், ஆதி பகவன், நிமிர்ந்து நில்” ஆகிய படங்கள் வியாபார ரீதியாக பெரிய வசூலையும் தரவில்லை. இனி, அடுத்தடுத்து அவருக்குத் தொடர்ச்சியாக படங்கள் வெளிவர உள்ளன. தற்போது நடித்து வரும் படங்கள் அனைத்துமே அடுத்த ஆண்டிற்குள் மொத்தமாக வெளிவந்துவிடும். அவையாவது அவருக்கு ஜெயத்தைத் தரட்டும்...!