போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
இந்தியாவில் முதன் முறையாக தென் ஆப்பிரிக்க திரைப்பட விழா சென்னையில் துவங்கியது. புதுடில்லியில் உள்ள தென் ஆப்பிரிக்க தூதரகமும், சென்னை இண்டோ சினி அப்ரிஷியேஷன் பவுண்டேஷன் அமைப்பும் இணைந்து இதனை நடத்துகிறது. ரஷ்யன் கல்சுரல் செண்டரில் நடந்த துவக்க விழாவில் கலந்து கொண்டு தென் ஆப்பிரிக்க துணை தூதர் மொகலா துவக்கி வைத்தார். அவர் பேசும்போது "நான் இந்திய சினிமாவை நேசிக்கிறேன். ரசிக்கிறேன். இந்தியாவுடன் தென் ஆப்பிரிக்க கலை மற்றும் கலாச்சார உறவின் ஒரு பகுதியாக இந்த திரைப்பட விழாவை கருதுகிறேன். முதன் முறையாக இது நடத்துப் படுவது மகிழ்ச்சிக்குரியது" என்றார்.
விழாவில் இண்டோ சினி அப்ரிஷியேஷன் பவுண்டேசன் பொதுச் செயலாளர் தங்கராஜ், தலைவர் சிவன் கண்ணன், துணை தலைவர் ராதாகிருஷ்ணன், வருமானவரித்துறை இயக்குர் டி.என்.கர், தென் ஆப்ரிக்க தூதரக செயலாளர் நிகோலோ பிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நடிகை ஷைலஜா குத்துவிளக்கேற்றினார்.