‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
அமராவதி படத்தில் அறிமுகமானவர் அஜீத். இப்போது கெளதம்மேனனின் இயக்கத்தில் தனது 55வது படத்தில் டபுள் ரோலில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதோடு, ரசிகர்களின் எதிர்பார்ப்பறிந்து விஜய் கத்தியில் இரண்டு வேடங்களில் நடித்திருப்பதைப்போன்று அஜீத்தும் இந்த படத்தில் இரண்டு கெட்டப்பில் நடித்து வருகிறார்.
மேலும், தென்னிந்திய சினிமாவில் முதன்முதலில் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் நடித்து அனைத்து ஹீரோக்களையும் ஆச்சர்யப்படுத்திய அஜீத், அதே பாணியை தொடர்ந்தும் வருகிறார். இந்த நிலையில், சினிமாவில் தனது கவனம் முழுவதுமாக இருந்தாலும் சென்னைக்கு அருகாமையில் படப்பிடிப்பு நடக்கும்போது அவ்வப்போது தனது பைக்கில் ஹெல்மெட் அணிந்து சென்று விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பயணம் மேற்கொள்வதையும் தொடர்ந்து வருகிறார் அஜீத்.
இந்த நிலையில், சமீபகாலமாக தான் எந்த அவுட்டோருக்கு சென்றாலும் அங்கு கண்ணில் தென்படும் வித்தியாசமான காட்சிகளை கேமராவில் புகைப்படங்கள் எடுப்பதிலும் ஆர்வம் காட்டி வந்தார் அஜீத். மரம் செடி கொடிகள் மட்டுமின்றி ஆங்காங்கே காணப்படும் வித்தியாசமான மனிதர்கள், பிராணிகள், பறவைகள் ஆகியவற்றையும் ஆயிரக்கணக்கில் தனது கேமராவிற்குள் பதிவு செய்துள்ளார் அஜீத்.
அப்படி தான் எடுத்ததில் சில அரிய புகைப்படங்களில், ஒரு நாய் தனது குட்டிகளுக்கு பால் கொடுப்பது, ஒரு மீனவன் ஏரியில் வலை வீசி மீன் பிடிப்பது, ஏரிக்கரையில் ஒருவர் துணி துவைப்பது. பள்ளி குழந்தைகள் கூட்டமாக நிற்பது, ஒரு பெண் தனது குழந்தையை தோளில் போட்டபடி நடந்து வருகிறது உள்பட ஒரு புதுமையான ஆல்பத்தை வெளியிட்டுள்ளார் அஜீத். இதை ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்து தலயின் திறமையை வியந்து பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.