போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ஆர்யாவின் தம்பி சத்யா நடித்த முதல் படம படித்துறை. ஆனால் அந்த படம் இன்னமும் கிடப்பில் கிடக்கிறது. அதையடுத்து சின்னத்திரை நடிகர் விஜய் ஆதிராஜ் நடித்த புத்தகம் படத்தில் நடித்தார். அந்த படம் வெளியானது ஆனால் ஓடவில்லை. அதனால் தம்பிக்காக ஆர்யாவே தயாரிப்பாளராக களமிறங்கி அமரகாவியம் என்ற படத்தை தயாரித்தார். நான் படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இயக்கியிருந்தார்.
ஆனால் பெரிய அளவில் பில்டப் கொடுக்கப்பட்ட அந்த படமும் வெற்றி பெறவில்லை. அதைத் தொடர்ந்து ராட்டினம் படத்தை இயக்கிய கே.எஸ்.தங்கசாமி இயக்கியுள்ள எட்டுத்திக்கும் மதயானை என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படத்தின் ஆடியோவை வெளியிட்டு பல மாதங்களாகியும் இன்னும் படம் திரைக்கு வருவது பற்றிய தகவலே இல்லை.
அதனால் அதுபற்றி விசாரித்தபோது, புத்தகம், அமரகாவியம் படங்களின் தோல்வி காரணமாக அப்படம் இன்னும் வியாபாரமாகவில்லை என்று கூறுகிறார்கள். அதையடுத்து தற்போது அப்படத்தை தானே ஓன் ரிலீஸ் பண்ணும் வேலைகளிலும இறங்கியிருக்கிறாராம் டைரக்டர் கே.எஸ். தங்கசாமி. ஆனபோதும், அண்ணன் ஆர்யாவின் தயவில் அடுத்தடுத்து காதல் டு கல்யாணம், சென்னை சிங்கப்பூர் என்ற படங்களில் புக்காகி பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார் சத்யா.