இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? |
3 என்ற படத்தில் இசையமைப்பாளரான அனிருத், அந்த படத்தில் ஒய் திஸ் கொலவெறி என்ற அதிரடியான ஒரு மெகா ஹிட் பாடலை கொடுத்தார். அதனால் ஒரே பாட்டில் உலகப்புகழ் பெற்றார். அப்படி அவர் ஆரவாரத்துடன் வளர்ந்து வந்த அதேநேரத்தில், நடிகை ஆண்ட்ரியாவுடனான உதட்டு முத்தத்தில் அவர் ஈடுபட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தின.
அதனால், அதையடுத்து சில நாட்களாக மனசுடைந்து போன அனிருத், தனது அறையே கதியென்று கிடந்திருக்கிறார். அப்போது அவரது பெற்றோர்தான் இன்டர்நெட் யுகத்தில் இதெல்லாம் சாதாரண விசயம். நாளைக்கு இதைவிட இன்னொரு சர்ச்சை வரும்போது உனது பிரச்சினை காணாமல் போய் விடும் என்று அவரை தேற்றினார்களாம்.
ஆக, பெற்றோரின் அரவணைப்பினால் அந்த முத்த சர்ச்சையிலிருந்து மெல்ல மெல்ல வெளியே வந்திருக்கிறார் அனிருத். இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரே படத்தில் கொலவெறி வைரல் என்று இணையதளம் மூலமாக நான் பிரபலமானேன். ஆனால் அந்த இணையதளமே எனது இமேஜை காலி பண்ணிடுச்சு. அதனால் ரொம்பவே குழம்பிப்போய் விட்டேன். ஆனால் பின்னர் கடவுள் அருளால் அதிலிருந்து முழுசாக மீண்டும் வெளியே வந்தேன்.
எதிர்நீச்சல், மான்கராத்தே என்று அடுத்தடுத்து மெகா ஹிட் கொடுத்த நான் இப்போது விஜய்யின் கத்தி படத்துக்கும் இசையமைத்து விட்டேன்.. அந்த வகையில் இப்போது ரொம்ப சந்தோசமாகவும், உற்சாகமாகவும் எனது இசைப்பயணம் சென்று கொண்டிருககிறது என்கிறார் அனிருத்.