போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
முன்னணி நட்சத்திரங்களை வைத்து மட்டுமே படங்களை இயக்குபவர் ஹரி. அதே சமயம், ஹீரோக்கள் சொல்வதெற்கெல்லாம் ஆமாம் சாமி போடவும் மாட்டார். அதுமட்டுமல்ல, படப்பிடிப்பு தளத்தில் தீயாய் வேலை செய்யும் ஹரி, ஹீரோக்களும் தன் வேகத்துக்கு இணையாக வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார். அதற்கு மாறாக நடந்து கொண்டால்..அவர் எப்பேற்பட்ட நடிகராக இருந்தாலும் கடுப்படித்துவிடுவார். கோவில் படத்தை இயக்கியபோது அப்படத்தின் ஹீரோவான சிம்பு, அநியாயத்துக்கு டார்ச்சர் கொடுத்தார். பார்த்தார் ஹரி...சிம்புவை உட்கார வைத்துக் கொண்டே அவருக்கு பதில் டூப்பை நடிக்க வைத்து காட்சிகளை எடுக்க ஆரம்பித்தார். அதன் பிறகு அலறியடித்துக்கொண்டு வந்து ஹரியிடம் சரண் அடைந்தார் சிம்பு.
இப்படிப்பட்ட ஹரியை விஜய்க்கு கதை சொல்ல அழைத்தார் விஜய்யின் அப்பா. ஹரி கதை சொல்ல ஆரம்பிக்க, விஜய்யின் அப்பா அதை சரியாக கேட்கவில்லையாம். கடுப்பான ஹரி எழுந்து வந்துவிட்டதோடு, விஜய்க்கும் போன் பண்ணி தன் கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த சம்பவத்துக்குப் பிறகு விஜய்யை வைத்து படம் எடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார் ஹரி. இது புரியாமல், விஜய்யை வைத்து எப்போது படம் இயக்கப் போகிறீர்கள்? என்ற கேள்வியை ஹரியிடம் கேட்கிறார்கள். பழைய சம்பவங்களை வெளியே காட்டிக்கொள்ளாமல், ஹரியும் நானா அவர்களை இயக்க மாட்டேன் என்கிறேன்? அவர்கள் கால்ஷீட்ஸ் கொடுத்தால் நான் ரெடி! என்கிறார்.