‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
வழக்கமான ஹீரோ கதைகளில் இருந்து மாறுபட்டு வித்தியாசமான கோணத்தில் கதைகளை செலக்ட் பண்ணி நடித்து வரும் விஜயசேதுபதி, சங்குதேவன் என்ற படத்திலும் வித்தியாசமான கதையில் நடித்தார். அந்த கதை தன்னை வெகுவாக பாதித்ததாகவும் அப்போது சொன்னார். அதன்காரணமாக, அதுவரை படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருந்த விஜயசேதுபதி, அந்த கதைக்காக தயாரிப்பாளராகவும் அவதரித்தார்.
ஆனால், அந்த படத்தை இயக்கிய புதுமுக இயக்குனர் சுதாகர் படமாக்கிய விதம் அவருக்கு பிடிக்கவில்லையாம். அதனால் அவர் சொன்ன கதை பிடித்து கமிட்டான விஜயசேதுபதி, இவர் படத்தை எப்படியும் சொதப்பி விடுவார் என்பதை அறிந்து, கதையை மட்டும் கொடுங்கள் நான் வேறு இயக்குனரை வைத்து டைரக்ட் செய்து கொள்கிறேன் என்றாராம்.
அதற்கு அந்த புதுமுக டைரக்டர் மறுத்து விட்டாராம். அதனால்தான் இந்த விஷப்பரீட்சையே வேண்டாமென்று 3 நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், படத்தையே கிடப்பில் போட்டிருக்கிறார் விஜயசேதுபதி. ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு அந்த டைரக்டர் மீண்டும் விஜயசேதுபதியை தொடர்பு கொண்டு, இப்போது கதையை தருகிறேன். நீங்களே நடியுங்கள் என்றாராம். அதைக்கேட்ட விஜயசேதுபதி, சங்குதேவன் கதை மீது எனக்கு ஆர்வம் இருந்தபோது நீங்கள் தரவில்லை. ஆனால் இப்போது எனக்கு அநத கதை மீது சுத்தமாக ஆர்வம் போய் விட்டது என்று சொல்லி வாங்க மறுத்து விட்டாராம்.