‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கடல் படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் முதலில் மகேஷ்பாபு, நாகார்ஜூனா ஆகியோர் நாயகர்களாக நடிப்பதாக இருந்தது. அதையடுத்து, இப்போது துல்கர் சல்மான் நடிப்பதாகவும் அதன் படப்பிடிப்பு அக்டோபர் 6-ந்தேதி முதல் தொடங்குவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண் தேஜாவிடமும் நடிக்க பேச்சு வார்த்தை நடந்ததாக தற்போது இன்னொரு செய்தி பரவியிருக்கிறது. ஆனால், கதையைக் கேட்ட ராம்சரண், தான் எதிர்பார்க்கிற கமர்சியல் போர்ஷன் குறைவாக இருந்ததால் நடிக்க மறுத்து விட்டதாகவும் தெரிகிறது.
இதுபற்றி ராம்சரண் வெளியிட்டுள்ள செய்தியில், எனது பேவரிட் டைரக்டர்களில் மணிரத்னமும் ஒருவர். அவர் படங்களை ரொம்பவே ரசித்திருக்கிறேன். அதனால் நேரம் வரும்போது அவருடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையும் எனக்குள் இருந்து வந்தது. அதனால் அவர் என்னை அழைத்தபோது ரொம்ப சந்தோசப்பட்டேன்.
ஆனால், அவர் சொன்ன கதையில் வியாபார நோக்கததை விட விருதுக்கான நோக்கம்தான் அதிகமாக இருந்தது. என்னைப் பொறுத்தவரை என்னை நம்பி பணம் போடும் ஒவ்வொரு தயாரிப்பாளரும் முக்கியம் என்று நினைப்பேன். அவர்கள் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவன். அதனால்தான் அந்த படத்தில் இருந்து விலகிக்கொண்டேன் என்று தெரிவித்துள்ள ராம்சரண், எதிர்காலத்தில் கமர்சியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடிக்க மணிரத்னம் அழைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.