‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கன்னடத்தில், சூப்பர் ரங்கா படத்தில் நடித்தவர் கிரீத்தி கர்பந்தா. இப்படத்தின் வெற்றியால் பிரபலமானவர் இப்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு படங்களிலும் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் பெங்களூர் விமான நிலையத்தில், அதிகாரிகள் தன்னிடம் தவறாக நடக்க முயன்றாக பரபரப்பு குற்றம் சாட்டியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, நான் பெங்களூர் விமான நிலையத்தில் நின்றிருந்தேன். அப்போது ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் என்னை நெருங்கி வந்தார், திடீரென என்னிடம் தவறாக நடக்க முற்பட்டார், அசிங்கமான வார்த்தைகளால் திட்டினார். இதை சில ஊழியர்களும் பார்த்து கொண்டு இருந்தனர். ஆனால் அவர்கள் யாரும் எனக்கு உதவ முன்வரவில்லை, இந்த சம்பவம் என் மனதை மிகவும் புண்படுத்திவிட்டது என்று கூறியிருக்கிறார். கிரீத்தியின் புகார், கன்னட சினிமாவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.