போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பெங்காலி நடிகை அங்கனாராய். தமிழில் வத்திக்குச்சி படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு சரியான வாய்ப்பு கிடைக்காமல் சிறிய இடைவெளிக்குப் பிறகு ரகளபுரம் படத்தில் நடித்தார். கபடம் என்ற படத்தில் கவர்ச்சியாக நடித்தார். மேகா என்ற படத்தில் சிறிய கேகரக்டரில் நடித்துள்ளார்.
அங்கனாராயை எல்லோரும் தென்னகத்து தீபிகா படுகோனே என்கிறார்கள். அவரும் தான் தீபிகா படுகோனே சாயலில் இருப்பதாக சொல்கிறார். அவர் மேலும் கூறியதாவது: தற்போது மகாபலிபுரம் படத்தில் நடித்து வருகிறேன். இதுவரை நடிக்காத ஒரு கேரக்டர். என் கேரியரில் முக்கியமானதாக இருக்கும். இதுதவிர கோப்ரா என்ற கன்னடப் படத்திலும், நா தேவுடு என்ற தெலுங்-கு படத்திலும் நடித்து வருகிறேன். மேலும் இரண்டு தமிழ் படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
நான் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் செட்டுகளில் நான் தீபிகா படுகோனே போன்று இருப்பதாக சொல்வார்கள். நான் அப்படிச் சொல்லிக் கொள்வதில்லை. என்றாலும் மற்றவர்கள் அப்படிச் சொல்லும்போது அதனை கிரடிட்டாக எடுத்துக் கொள்கிறேன். சந்தோஷமாகவும் இருக்கிறது. அழகில் அவரைப்போல இருக்கிறேனா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவரைப்போன்று சாதிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது-. என்கிறார் அங்கனாராய்.