ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட 'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சரியான திட்டமிடல் இல்லாததால் குளறுபடிகளில் நடந்து முடிந்த இசை விழாவைப் பற்றி பலரும் பலவிதமான கமெண்ட்டுகளை அடிக்க ஆரம்பித்தனர். இசை விழாவில் படத்தின் நாயகன் விக்ரம், எமி ஜாக்சன் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர். படத்தில் வில்லன்களாக நடித்துள்ள மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான சுரேஷ் கோபி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ள நடிகர் சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. அந்த விழாவிற்கு அவர்கள் அழைக்கப்படவில்லை என்றும் செய்திகள் வெளியாகின.
இதனிடையே அந்த விழாவில் கலந்து கொள்ளாதது பற்றி சுரேஷ் கோபி விளக்கம் அளித்துள்ளார். “மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற 'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை என படத்தின் தயாரிப்பாளர்களுக்கு ஏற்கெனவே தகவல் தெரிவித்துவிட்டேன். அம்மாதிரியான பெரும் தொகை செலவு செய்யப்படும் விழாக்களில் கலந்து கொள்வதில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால், 'ஐ' படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கண்டிப்பாகக் கலந்து கொள்வேன்,” எனவும் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்பில் சுரேஷ் கோபி, ராம்குமார் உள்ளிட்டோர் சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும், அதனால்தான் அவர்களை விழாவிற்கு அழைக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன. படத்திற்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வரவேற்பைப் பார்த்து சுரேஷ் கோபி போன்றோர் இப்படி பதிலளிக்கிறார்களா என்பது இனி அவர் கலந்து கொள்ளும் பிரமோஷன் நிகழ்ச்சிகளை வைத்துத் தெரிந்து கொள்ளலாம்.