போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் அவரது 55வது படத்தின் தொடக்கத்தில் மங்காத்தா, ஆரம்பம், வீரம் படங்களில் நடித்தது போலவே சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல் கெட்டப்பிலேயே நடித்து வந்தார். சென்னை ஈசிஆர் சாலையில் பெரும்பாலும் இரவு நேரங்களாக அவர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. அவருடன் சில நாட்களில் அனுஷ்காவும் பங்கேற்றார்.
ஆனால் ஒரு கட்டத்தில் சென்னையில் இருந்து இடம் பெயர்ந்த யூனிட், சிக்கிம், ராஜஸ்தான், சண்டிகர், ஜோத்பூர் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி வந்தது. சில மாத இடைவெளிக்கு பிறகு ஆரம்பித்த அப்படப்பிடிப்பில் இளமையான கெட்டப்பில் அஜீத் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.
அதனால் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் இருந்து விடுபட்டு, யூத்தாக தன்னை மாற்றிக்கொண்டு நடித்தார் அஜீத். அப்போது அவருடன் த்ரிஷா நடித்த காட்சிகளும் படமாக்கப்பட்டன. குறிப்பாக இதற்கு முன்பு ஜோடி சேர்ந்து நடித்த கிரீடம், ஜி, மங்காத்தா ஆகிய படங்களை விட இந்த படத்தில் கூடுதல் ரொமான்டிக்காக அஜீத்தும், த்ரிஷாவும் நடித்துள்ளார்களாம்.
மேலும், அவுட்டோர் படப்பிடிப்புகளை முடித்து விட்டு தற்போது சென்னை திரும்பி விட்ட கெளதம்மேனன், மீண்டும் புலனாய்வு அதிகாரியாக நடிக்கும் அஜீத் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கப் போகிறாராம். அதனால் மீண்டும் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்புக்கு மாறியுள்ளார் அஜீத். விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற உள்ளது.