இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா நடிக்கும் நண்பேன்டா என்ற படத்தின் படப்பிடிப்பு விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூந்துறையில் நடந்து வருகிறது. உதயநிதியும், காமெடி நடிகர் சந்தானமும் சிறையில் இருந்து தப்பி செல்வது போன்ற காட்சியை படமாக்க. ஆர்ட் டைரக்டரின் பணியாட்கள் கடந்த சில நாட்களா ஷெட் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த பணிக்காக ராட்சத கிரேன் ஒன்று பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. நேற்று (செப் 21) வேலை நடந்து கொண்டிருந்தபோது திடீரென கிரேன் சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த அருணகிரி, ரமேஷ், சதீஷ், மூர்த்தி ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாளை (செப் 22) முதல் அங்கு நடைபெறுவதாக இருந்த நண்பேண்டா படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.