பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... |
தெரு நாய்களை கல்லால் அடிக்கக்கூடாது. துன்புறுத்தக்கூடாது. அவற்றை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்று நடிகை த்ரிஷா நீண்டகாலமாக பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும், பிராணிகள் நல வாரியத்திலும் உறுப்பினராக இருக்கிறார். அதேபோல் நடிகை அமலாவும் நாய்கள் உள்பட அனைத்து பிராணிகளையும் ஆதரிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருவதோடு, தானும் நாய்களை பராமரித்து வருகிறார்.
இந்த நிலையில், பருத்தி வீரன் ப்ரியாமணிக்கு புலிகள் மீது பாசம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சில மிருகக்காட்சிகளில் காட்டில் சுதந்திரமாக அலையும் புலிகளை கூண்டில் அடைத்து காட்சி பொருளாக வைத்துள்ளார்கள். அது மிருக காட்சி சாலை விதிமுறைகளுக்கு எதிரானது என்று பிரச்சாரம் செய்து வருகிறார்.
மேலும், மனிதர்களை வாழ்நாள் முழுக்க ஒரு கூண்டிற்குள் அடைத்து வைத்தால் எவ்வளவு கொடுமையாக இருக்கும். அதே மாதிரிதானே விலங்குகளுக்கும் இருக்கும். அதனால் மிருக காட்சி சாலைகளில் புலிகளை கூண்டிற்குள் அடைத்து வைக்காமல், அவை காட்டுக்குள் சுதந்திரமாக திரிவது போன்று அவற்றை பராமரிக்க வேண்டும். அதுதான் வாயில்லா ஜீவன்களுக்கு நாம் செய்யும் மரியாதையாகும் என்றும் தனது கருத்தை தெரிவித்துள்ளார் ப்ரியாமணி.