போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
மலேசியாவில் உள்ள மலாக்கா மாநிலத்தில் வருகிற அக்டோபர் 2 ந் தேதி முதல் 5ந் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. மலாக்கா தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியாகும். ஆண்டு தோறும் இங்கு நடக்கும் எடிசன் சர்வதேச திரைப்பட விழா மலேசியா நாட்டின் மிகப்பெரிய திரைப்பட விழாவாகும். இதில் இந்த ஆண்டு நான் சிவப்பு மனிதன் படம் திரையிடப்படுகிறது. இந்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் யுடிவி தனஞ்செயன் தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.
விஷால், லட்சுமிமேனன் நடித்த இந்தப் படம் கமர்ஷியல் ஆக்ஷன் படமாக இருந்தாலும் நார்கோலெப்ஸி எனப்படும் தூக்க வியாதி தொடர்பான படம் என்பதால் திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. நான் சிவப்பு மனிதனை திரு இயக்கி இருந்தார். படம் கமர்ஷியலாக சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.