‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இன்றைய போட்டி நிறைந்த உலகத்தில் திரையுலகத்தில் நடக்கும் போட்டி என்பது சாதாரணமானது கிடையாது. தினம் தினம் புதுப் புது போட்டியாளர்கள், வித விதமான சர்ச்சைகள் இவற்றைக் கடந்துதான் ஒருவர் நிலைத்து நிற்க முடியும். நாயகர்கள் எப்படியாவது சமாளித்து அவர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் வட்டத்தை வைத்து தாக்குப் பிடித்து விடுவார்கள். ஆனால், நடிகைகளுக்கு அப்படி கிடையாது. அவர்கள் படங்களின் வெற்றி, உடன் நடிக்கும் நடிகர்கள் அவற்றை வைத்தே கொண்டாடப்படுகிறார்கள். இருந்தாலும் ஒரு சில நடிகைகளுக்கு தனிப்பட்ட ரசிகர்கள் இருப்பதால் கொஞ்ச காலம் தாக்குப் பிடிப்பார்கள். இங்கு ஒரு நடிகைக்கு திருமணமாகி விட்டால், அதன் பின் அவர் ஹீரோயினாக நடிப்பதை நமது ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையே காலம் காலமாகத் தொடர்கிறது.
தற்போது தமிழில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க முயற்சித்து வரும் சமந்தா சமீபத்திய பேட்டி ஒன்றில், “சில நேரங்களில் எனக்கும் கடினமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அப்போது என்னுடைய நலம் விரும்பிகள் நான் விலக நினைத்தாலும் எனக்கு ஆதரவாக இருந்து மாற்றி விடுவார்கள். பணத்துக்காக நடிப்பதை நான் என்றுமே விரும்பியதில்லை. எனக்கு வாய்ப்புகள் குறையும் போது நான் திரையுலகை விட்டு விலக மாட்டேன். முன்னணியில் பிஸியாக இருக்கும் போதே திரையுலகை விட்டு விடுவேன்,” என்று கூறியிருக்கிறார்.
“உடலையும், முகத்தையும் அழகாக்கிக் கொள்வதை விட மனதளவில் நம்மை வலிமையானவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். தினம் தினம் பல்வேறு விதமான எண்ணம் கொண்ட ஆயிரக் கணக்கானவர்களைச் சந்திக்கிறோம். அதனால், மனதளவில் நம்மை வலிமையானவர்களாக வைத்துக் கொண்டால் நல்லது,” என்றும் கூறுகிறார்.
சமந்தா சமர்த்தா பேசவும் செய்யறாங்க....