ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
நாக்குமுக்க இசையமைப்பாளர் விஜய்ஆண்டனி தனது துள்ளலான இசையால் கோடம்பாக்கத்தின் முக்கியமான இசையமைப்பாளராக குறுகிய காலத்தில் வளர்ந்தார். இன்னும் பெரிய அளவில் வளருவார் என்ற எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், நான் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதோடு சலீம் படத்திற்கு தானே இசையமைத்திருக்கும் அவர், இனி எனது படங்களுக்கும் நான் இசையமைக்கப் போவதில்லை என்று கூறி வருகிறார்.
நான் படம் ஓரளவு வெற்றி பெற்றதால், தன்னை ஒரு நடிகராக தக்க வைத்துக்கொண்ட அவர், இப்போது நான் படத்தின் இரண்டாம் பாகமாக சலீம் என்ற படத்தில் நடித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அப்படம் திரைக்கு வந்தது. அப்படத்தின் இறுதியில் தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி நேற்று சென்னையில் மீடியாக்களுக்கு சலீம் படத்தை ஷோ போட்டு காண்பித்த விஜய் ஆண்டனி, படம் முடிந்த பிறகு பத்திரிகையாளர்கள் முன்பு தோன்றி பேசினார். அப்போது, படம் முடிந்த பிறகு தொடரும் என்று போடப்பட்டுள்ளதே என்று அவரிடம் கேட்டபோது, நான் படத்தின் அடுத்த பாகமாகத்தான் இப்போது சலீம் வந்திருக்கிறது. இதன்பிறகு சலீமின் அடுத்த பாகம் தொடரவிருக்கிறது. மேலும், இப்படத்தை 3 பாகம் மட்டுமின்றி 30 பாகம் வரைகூட எடுக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது என்று கூறினார்.