போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
மங்காத்தா, ஆரம்பம் படங்களில் நடித்தபோது சண்டை காட்சிகளில் டூப் பயன்படுத்தாமல் நடித்த அஜீத் சில விபத்துக்களையும் சந்தித்தார். ஆனபோதும், அவர் ரிஸ்க் எடுப்பதை விடவில்லை. என்னால் முடிந்தவரை நானே நடிக்கிறேன். முடியாதபட்சத்தில் டூப் நடிகரை பயன்படுத்தலாம் என்று சொல்லி வம்படியாக ரிஸ்க் எடுப்பதை தொடர்ந்து வருகிறார்.
இந்த நிலையில். தற்போது கெளதம்மேனன் இயக்கத்தில் நடிக்கும் படத்திலும் ரயில் சண்டை காட்சியில் நடித்தபோது, ஓடும் ரயிலில் ஓடிக்கொண்டே ஏறுவது. ரயில் பெட்டியின் மேல் நின்று சண்டை செய்வது போன்ற காட்சிகளில் தானே துணிச்சலாக நடித்துள்ளார்.
அதோடு, ஒரு காட்சியில் 120 அடி உயரத்தில் இருந்து கயிற்றில் கீழே இறங்குவது போன்று நடிப்பதற்கு அஜீத் நடிக்க வந்தபோது, இந்த ரிஸ்க்கெல்லாம் வேண்டாம். ஏதாவது பிரச்சினையாகி விடும் என்று தடுத்தாராம் இயக்குனர் கெளதம்மேனன். ஆனால், அஜீத்தோ, பைக் ரேஸ் எவ்வளவு ரிஸ்க்கானது அதையே நான் விளையாட்டாக செய்பவன். எனக்கு இதெல்லாம் ஒரு விசயமே இல்லை என்று தானே கயிற்றில் இறங்கி வருவது போல் நடித்தாராம்.
ஆனால், அஜீத் தைரியமாக இறங்கினாலும் 120 அடி உயரமான பில்டிங்கில் இருந்து அவர் கீழே இறங்கி வருவது வரை அனைவரும் பயந்துடனேயே இருந்தார்களாம்.