ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
அடுத்த மாதம் நடைபெற உள்ள ஷங்கரின் ஐ பட ஆடியோ வெளியீட்டு விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்நேகர் கலந்து கொள்ளவிருக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது. ஐ படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்தினின் தம்பியும், அப்படத்தை இணைந்து தயாரித்து வரும் ரமேஷ் பாபு சமீபத்தில் அமெரிக்கா சென்றார். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அர்னால்டின் வீட்டிற்குச் சென்று ஐ இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு அவரை முறைப்படி நேரில் அழைத்தார். ரமேஷ் பாபுவின் அழைப்பை ஏற்றுக்கொண்டு ஐ பட விழாவில் கலந்துகொள்வதாக உறுதி அளித்துள்ளார் அர்னால்டு.
ஐ படம் பற்றியும் சிலாகித்துப் பேசிய அர்னால்டு, ஹாலிவுட் தரத்திற்கு இணையாக ஐ படம் உருவாகி வருவதாக தான் கேள்விப்பட்டதாகவும், குறிப்பாக ஹீரோ விக்ரம் இப்படத்திற்காக 120 கிலோ, 70 கிலோ, 50 கிலோ என தன்னை உருமாற்றி நடித்திருப்பதைப் பற்றியும் வியந்து பேசினாராம். அர்னால்டின் வருகையை உறுதி செய்யும் விதமாக ரமேஷ் பாபு அமெரிக்காவில் அர்னால்டுடன் எடுத்துக் கொண்ட புடைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அதோடு, ஆஸ்கார் ஃபிலிம்ஸின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்திலும் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
ஐ படத்தின் தெலுங்கு பதிப்பின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இன்னொரு ஹாலிவுட் பிரபலமான ஜாக்கிசான் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார். அர்னால்டு, ஜாக்கிசான் வருகையைத் தொடர்ந்து ஐ படத்தைப் பற்றி எதிர்பார்ப்பு எகிறி வரும் அதே நேரத்தில் இன்னொரு முணுமுணுப்பும் கேட்கிறது படத்துறையில்.
இரண்டு வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட ஐ படத்தில் பணியாற்றிய பல தொழிலாளர்களுக்கு இன்னும் சம்பள பாக்கி வைத்திருக்கிறார்கள். தங்களின் சம்பளத்தைக் கேட்டு வருடக்கணக்கில் ஆஸ்கார் பிலிம்ஸுக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள் தொழிலாளர்கள். அவர்களின் சம்பளத்தை கொடுக்காமல் இழுத்தடிப்பவர்கள், அர்னால்டு, ஜாக்கிசான் இருவருக்கும் தலா கோடிகளை கொடுத்து இசைவெளியீட்டு விழாவுக்கு கூட்டி வருகிறார்களே நியாயமா இது? என்பதே தொழிலாளர்களின் முணுமுணுப்பு.
நியாயமான கேள்விதானே இது?