‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கேமரா என்ற மாயக்கண்ணாடி வழியே பட்டாம்பூச்சிகளாய் நடிகைகளை பளிச்சிட வைப்பவர்கள் ஒளிப்பதிவாளர்கள். முன்னதாக ஒரு நடிகையை அழகாக காட்டுவதற்கு மேக்கப், காஸ்டியூம் என்று தொடங்கி லொகேஷன், லைட்டிங் என பல விசயங்களிலும் சிரத்தை எடுக்கிறார்கள். அதையும் தாண்டி போஸ்ட் புரொடக்சன் ஒர்க் என்று வரும்போது, சிஜி என்ற கலர் கரெக்சன் ஒர்க்கில் ஒவ்வொருவரின் தோலுக்கேற்ப நிறைய கரெக்சன் செய்வார்கள்.
அப்படி அஞ்சான் படத்தில் நடித்த சமந்தாவுக்கு நிறைய கரெக்சன் தேவைப்பட்டதாம். ஏற்கனவே அவர் தோல் நோயால் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் ஓவர் லைட்டிங் கொடுக்காமல் படமாக்கினாராம் சந்தோஷ்சிவன். அதனால் அவரது மேனியை பளிங்கு கல் போன்று பளிச்சிட வைப்பதற்காக சிஜி ஒர்க் செய்பவர்கள் மாதக்கணக்கில் சிரமப்பட்டிருக்கிறார்களாம்.
அந்த வகையில், அதற்கே ஒரு பெரிய தொகை செலவாகி விட்டதாம். அதனால்தான், சமந்தாவை அடுத்தடுத்து கிளாமராக்கிக் காட்ட வரிந்து கட்டிய ஆந்திர பட அதிபர்கள், இந்த சேதியைக்கேட்டு கிளாமருக்காக இவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டுமா? என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம். ஆனால் சிலரோ காஸ்ட்லியான கிளாமருக்கு காஸ்ட்லியாக செலவு செய்தால்தான் முடியும் என்று மீண்டும் சமந்தாவுக்கு பிகினி உடையணிந்து அழகு பார்க்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.