செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி |
ஏ.எல்.விஜய் ஆர்யாவை நாயகனாக வைத்து இயக்கிய மதராசப்பட்டினம் படத்திற்காக ஹாலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டவர் எமி ஜாக்சன். முதல் படத்திலேயே இந்திய கலாச்சார பெண்ணாகவும் நடித்து ரசிக இதயங்களை கொள்ளை கொண்ட எமிக்கு, அதன்பிறகு விக்ரமுடன் நடித்த தாண்டவம் படம் கைகொடுக்கவில்லை.
இருப்பினும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ள ஐ படத்தில் நடித்து தனது ரேஞ்சை உயர்த்திக்கொண்டுள்ளார். இந்த படத்தில் முதலில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கயிருந்தவர் சமந்தாதான். ஆனால் கடல் படத்தில் சில நாட்கள் நடித்தபோதே அவருக்கு தோல் அலர்ஜி நோய் ஏற்பட்டதால், அவரை தனது படத்திலிருந்தும் நீக்கினார் ஷங்கர்.
அதன்பிறகு, ஏற்கனவே தாண்டவம் படத்தில் விக்ரமுடன் எமி நடித்திருந்ததால், அவரது பர்பாமென்ஸ் பற்றி விக்ரமிடம் கேட்ட ஷங்கர், திருப்தியான பதில் கிடைக்கவே தனது ஐ படத்திற்கு கமிட் பண்ணினார். இப்போது அந்த படத்தை முடித்து விட்ட எமிஜாக்சன், வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும மாஸ் படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், ஐ படத்திற்கு பிறகு எமியின் மார்க்கெட் எகிறிவிடும் என்று நினைத்த சில படஅதிபர்கள், தங்கள் படங்களுக்கு அவரை புக் பண்ண அணுகியபோது, மேல்தட்டு ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பேன் என்று உறுதியாக சொன்ன எமி, அவர்கள் சொன்ன இரண்டாம் தட்டு ஹீரோக்களுடன் நடிக்க மறுத்து விட்டாராம்.