போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். இப்படத்திற்கு எதிராக சதீஷ்பால் என்பவர், என்னுடைய ஒரு மழைக் காலத்து நாவலிலிருந்துதான் த்ரிஷ்யம் படத்தின் கதை எடுக்கப்பட்டது. எனவே த்ரிஷ்யம் படத்தை ரீமேக் செய்யக் கூடாது என்று சில மாதங்களுக்கு முன் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதற்கிடையில் த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்கான பாபநாசம் படத்தின் படப்பிடிப்பு துவங்க வேண்டிய நாள் நெருங்கி வர...கோர்ட் தீர்ப்பு எப்படி வருமோ என கலக்கத்தில் இருந்தது பாபநாசம் யூனிட்.
இந்நிலையில், சதீஷ்பாலின் வாதத்தை ஏற்று, த்ரிஷ்யம் படத்தை ரீமேக் செய்யக்கூடாது அல்லது 10 லட்ச ரூபாய் அபராதம் செலுத்திவிட்டு படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. நேற்று முதல் திருநெல்வேலியில் கமல், கௌதமி பங்குபெறும் பாபநாசம் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. நீதிமன்ற தீர்ப்பு குறித்து விசாரித்தபோது, நீதிமன்றத்தில் கட்ட வேண்டிய அபாரதத் தொகை 10 லட்ச ரூபாயை செலுத்திவிட்டுத்தான் படப்பிடிப்பைத் துவங்கியிருப்பதாகக் கூறுகிறார்கள் பாபநாசம் படக்குழுவினர்.
த்ரிஷ்யம் படத்தை மலையாளத்தில் இயக்கிய ஜீத்து ஜோசப்பே தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தையும் இயக்குகிறார். போலீஸ் வேடமொன்றில் கலாபவன் மணியும், போலீஸ் ஐ.ஜியாக ஆஷா சரத்தும், கமலின் மூத்த மகளாக ஜில்லாவில் நடித்த நிவேதா தாமஸும், இளைய மகளாக த்ரிஷ்யம் படத்தில் நடித்த எஸ்தரும் நடிக்கிறார்கள்.