பைரசியில் இருந்து அமீர்கான் படத்தை பாதுகாக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு | 30 வருடம் கழித்து டெலிபோன் எண்ணில் புதிய காருக்கு நம்பர் வாங்கிய மோகன்லால் | மறைந்த பின்னரும் பொங்கலுக்கு மோதிய எம்ஜிஆர், கருணாநிதி | சச்சினுடன் விரலால் கிரிக்கெட் விளையாடிய அமிதாப் பச்சன் | அந்த வாத்தியார் போலவே இந்த வாத்தியாரும்... : கிர்த்தி ஷெட்டி | சினிமா நாயகன் ஆனார் டிவி நடிகர் பிரணவ் மோகனன் | திரிஷாவுக்கு என்னாச்சு? எதுவும் பேசுவது இல்லையே... | 'திரெளபதி 2' படத்துக்காக எடை கூடினேன்: ரக்ஷனா இந்துசூடன் | தமிழ் சினிமாவில் கடன் இல்லாத ஒரே தயாரிப்பாளர் நான்தான்: ஞானவேல்ராஜா | பிளாஷ்பேக்: ஒரு வெற்றிப் படத்துடன் ஒதுங்கிய இயக்குனர் |
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த படங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களாம் தியேட்டர் அதிபர்கள். மாஸ் ஹீரோக்கள் வரிசையில் இடம் பிடித்திருக்கும் விஜயின் படங்கள் சமீப காலமாக எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை வேட்டைக்காரன், சுறா என அடுத்தடுத்து வெளியான படங்களை ஆர்வமுடன் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி திரையிட்ட தியேட்டர்கள் எல்லாம் நஷ்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. அதன் விளைவு... விஜய்யின் அடுத்த படத்தில் நஷ்டத்தை ஈடுகட்டும் முயற்சியிலோ அல்லது திரையரங்க உரிமையாளர்களுக்காக ஒரு படத்தை நடித்துத் தரும் முடிவிற்கோ வர வேண்டும் என தியேட்டர்காரர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அப்படி நடித்துக் கொடுக்காவிட்டால் விஜய் படத்துக்கு தடை போடும் முடிவிலும் இருக்கிறார்களாம் தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினர். இதுசம்பந்தமாக வரும் சனிக்கிழமை (22ம்தேதி) தியேட்டர் அதிபர்கள் சென்னையில் கூடி முக்கிய முடிவெடுக்கப் போகிறார்களாம். இறங்கி வருவாரா விஜய்?!