'ஹிருதயபூர்வம்' முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த மாளவிகா மோகனன் | பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை-2 கைவிடப்பட்டதா? | திருப்பதி கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த பிரபுதேவா! | நடிகை ரகுல் ப்ரீத் சிங் கணவரின் வீட்டில் குடியேறும் ஷாருக்கான்! | 'குட் பேட் அக்லி' படத்தின் மையக்கரு இதுதான்! - ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | சித்தார்த் - கியாரா திருமணத்தால் பல நாட்கள் அழுதேன் ; கிச்சா சுதீப் மகள் புது தகவல் | சல்மான்கான் குடும்பத்தினருடன் 'சிக்கந்தர்' படம் பார்த்த ஏ.ஆர் முருகதாஸ் | 'மிராஜ்' படப்பிடிப்பை நிறைவு செய்தார் ஜீத்து ஜோசப் | மோகன்லால் அறிமுக காட்சியே ரஜினியை மனதில் வைத்து உருவாக்கியதுதான் ; பிரித்விராஜ் | 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வரும் மனிஷா ஜஷ்னானி |
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த படங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களாம் தியேட்டர் அதிபர்கள். மாஸ் ஹீரோக்கள் வரிசையில் இடம் பிடித்திருக்கும் விஜயின் படங்கள் சமீப காலமாக எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை வேட்டைக்காரன், சுறா என அடுத்தடுத்து வெளியான படங்களை ஆர்வமுடன் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி திரையிட்ட தியேட்டர்கள் எல்லாம் நஷ்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. அதன் விளைவு... விஜய்யின் அடுத்த படத்தில் நஷ்டத்தை ஈடுகட்டும் முயற்சியிலோ அல்லது திரையரங்க உரிமையாளர்களுக்காக ஒரு படத்தை நடித்துத் தரும் முடிவிற்கோ வர வேண்டும் என தியேட்டர்காரர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அப்படி நடித்துக் கொடுக்காவிட்டால் விஜய் படத்துக்கு தடை போடும் முடிவிலும் இருக்கிறார்களாம் தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினர். இதுசம்பந்தமாக வரும் சனிக்கிழமை (22ம்தேதி) தியேட்டர் அதிபர்கள் சென்னையில் கூடி முக்கிய முடிவெடுக்கப் போகிறார்களாம். இறங்கி வருவாரா விஜய்?!