‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழக அரசின் புதிய விதிமுறைப்படி தணிக்கை குழுவால் யு சான்றிதழ் அளிக்கப்படும் படங்கள் மட்டுமே வரிவிலக்கிற்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள படங்கள். சில படங்கள் நல்ல படங்களாக இருந்தபோதும் படத்தில் இடம்பெறும் ஒரு சில காட்சிகள், கதையின் போக்கு இவற்றை வைத்தும், யு/ஏ, ஏ சான்றிதழ் கொடுப்பார்கள். உதாரணமாக பாலுமகேந்திரா இயக்கி தேசிய விருது பெற்ற மூன்றாம் பிறை படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்தார்கள். காரணம் பொன்மேனி உருகுதே என்ற பாடல்.
தற்போதும் இதுபோன்று நடந்து வருகிறது. ஏகப்பட்ட கொலைகள் ரத்தம் தெறிக்கும் படமான அஞ்சான் படத்திற்கு யூ சான்றிதழ் கொடுத்தார்கள், அதைவிட சற்று குறைவான கொலைகள் கொண்ட ஜிகிர்தண்டாவுக்கு யு/ஏ கொடுத்தார்கள். சக்தி மிக்கவர்கள் விரும்பிய சான்றிதழைப் பெறலாம் என்பதுதான் இன்றுள்ள நிலை. இது மாற வேண்டும் தணிக்கை சான்று அடிப்படையில் அல்லாமல் சிறந்த படங்கள் என்ற அடிப்படையில் வரிவிலக்கு தரவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கமும் இதனை வலியுறுத்தி வருகிறது. தமிழக அரசின் செய்தித்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வணிவரித்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோரை நேரில் சந்தித்து இந்த கருத்தை வலியுறுத்தி வந்துள்ளனர்.
இதுகுறித்து விக்ரமன் கூறியதாவது: மத்திய அரசு படங்களை விருதுக்கு தேர்வு செய்யும் போதும் சரி, வேறு சலுகைகளுக்கு தேர்வு செய்யும்போதும் சரி, அந்த படம் யூ சான்றிதழ் படமா ஏ சான்றிதழ் படமாக என்று பார்ப்பதில்லை. படத்தில் என்ன கருத்து சொல்லப்பட்டடிருக்கிறது. எப்படி எடுக்கப்பட்டிருக்கிறது என்றுதான் பார்க்கிறார். தணிக்கை சான்றிதழ் அடிப்படையில் வரிவிலக்கு அளிப்பதால் சில நல்ல படங்கள் வரிவிலக்கு சலுகையை பெற முடியாமல் போகிறது. எனவே தமிழக அரசு சிறந்த படங்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று இயக்குனர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைத்திருக்கிறோம் என்றார்.