போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தமிழ் நடிகரான சித்தார்த், மலையாள நடிகரான ப்ருத்விராஜ் இருவரும் சமகாலத்து நடிகர்கள் என்றாலும், சித்தார்த் பாய்ஸ் படம் தொடங்கி காவியத்தலைவன் வரை 22 படங்களில்தான் நடித்திருக்கிறார். ஆனால, ப்ருத்விராஜ் 80 படங்களுக்கும் மேல் நடித்து விட்டார். ஆக, ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறார் அவர்.
அதோடு, அவர்கள் இருவருமே தாங்கள் நடிக்கிற படங்களில் தங்களுக்கு பர்ப்பாமென்ஸ் ஸ்கோப் இருக்க வேண்டும் என்று நினைக்கிறவர்களும் கூட. அப்படிப்பட்ட இவர்களை காவியத்தலைவன் என்ற படத்தில் இணைத்திருக்கிறார் வசந்தபாலன்.
இந்த படத்தில் நடித்துள்ள நாசர், இவர்களின் கூட்டணி பற்றி கூறுகையில், நான்கூட சித்தார்த்,ப்ருத்விராஜ் இருவரும் ஒரே படத்தில் நடிக்கிறார்கள் என்றதும், எப்படி இந்த வண்டி கரை சேரப்போகிறது என்று மனதளவில் நினைத்ததுண்டு. காரணம், அவர்கள் இருவருமே ஞானகர்வம் கொண்டவர்கள். ஆனால் ஸ்பாட்டிற்கு வந்த பிறகு அவர்கள் இருவரும் நண்பர்களாக பழகியதைப் பார்த்தபோது, எனது அந்த எண்ணம் மாறியது.
மேலும், அவர்களுக்கிடையே ஈகோ இல்லாத மனநிலையைக்கண்டு ஆச்சர்யப்பட்டேன். இருவரும் நடிப்பு விசயத்தில் ஒரு போராளிகளைப்போல செயல்பட்டனர். அவர்களின் போட்டிமயமான நடிப்பு காவியத்தலைவன் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது என்று கூறிய நாசர், இன்றைய ரசிகர்கள் நவீனமயமான படங்களை பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர்களாக இருந்தாலும், இன்றைய சினிமாவின் அடிநாதமாக நாடகங்களே இருக்கின்றன என்பதால் இந்த காவியத்தலைவனை இக்கால ரசிகர்களும் கட்டாயம் ஆர்வமாக கண்டு களிப்பார்கள் என்று கூறுகிறார்.