‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சினிமாவில் பிசியாக இருந்த காலகட்டத்தில் தான் இசையமைத்த படங்களின் ஆடியோ விழாக்களுக்கு பெரும்பாலும் வரமாட்டார் இளையராஜா. ஆனால் இன்றைக்கு நிலைமை தலைகீழாகி விட்டது. அவ்வப்போது ஒரு படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா, அது சின்ன படமாக இருந்தாலும அதன் ஆடியோ விழாவில் அவசியம் கலந்து கொள்கிறார். அதோடு, தான் கடந்து வந்த காலகட்டங்களில் நடைபெற்ற சுவாரஸ்யமான விசயங்களையும் மேடையில் பேசி கைதட்டல் வாங்கிக்கொள்கிறார்.
இந்நிலையில, சமீபத்தில் திருவண்ணாமலையில் நடைபெற்ற ஒரு ஆன்மீக இலக்கிய விழாவில் இளையராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். எப்போது அந்த கோயிலுக்கு சென்றாலும் மலையைச்சுற்றி வணங்கி தரிசனம் செய்யும் வழக்கம் கொண்ட இளையராஜா இந்த முறையும் மலையை சுற்றினாராம்.
ஆனால், சிவனே ஆனந்த சயனத்தில் வீற்றிருப்பது போன்று அமைந்திருக்கும் அந்த மலையில் ஒவ்வொரு பெளர்ணமியின் போதும் பக்தர்கள் அந்த மலையைச்சுற்றித்தான் வணங்குவார்கள். ஆனால் அந்த மலையில் இப்போது வீடுகள் முளைத்திருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்து விட்டாராம் இளையராஜா.
இதையடுத்து நடந்த ஆன்மீக சொற்பொழிவில் பேசியபோது, சிவன் மீது நம்பிக்கை கொண்ட லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு தரிசனம் செய்ய வருகிறார்கள். தங்களின் வேண்டுதலை நிறைவேற்ற இந்த மலையைத்தான் சுற்றுகிறார்கள். ஆனால் இப்போது இந்த மலையில் வீடுகள் கட்டியிருக்கிறார்கள். அப்படியென்றால் சிவனை சுற்றி வருபவர்கள் இவர்களையும் சேர்த்து சுற்ற வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினாராம்.
விளைவு, இதுவரை இந்த விவகாரத்தில் கண்டுகொள்ளாமல் இருந்த திருவண்ணாமலை பக்தர்கள், சிவன் மலையில் கட்டியிருக்கும் வீடுகளை நகராட்சி அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் குதிக்க தயாராகி விட்டார்களாம்.