‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கார்த்திக்-ராதா அறிமுகமான முதல் படம் ''அலைகள் ஓய்வதில்லை''. 1981ல் பாரதிராஜா இயக்கிய இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். படத்தில் மொத்தம் 11 பாடல்கள் இடம்பெற்றன. அதில் பஞ்சு அருணாசலம் எழுதிய, 'புத்தம் புது காலை...' -என்று தொடங்கும் எஸ்.ஜானகி பாடிய பாடல் கேசட்டில் மட்டும் இடம்பெற்றிருந்தது. அதை பாரதிராஜா விஷூவல் பண்ணவில்லை. ஆனபோதும் அந்த பாடலும் மெகா ஹிட்டானது.
ஆனால் அந்த பாடலை இப்போது இளையராஜா இசையில் வெளியாகவிருககும் மேகா என்ற படத்தில் இணைத்து விஷூவல் பண்ணியிருக்கிறார்கள். கதைப்படி, ஒரு திருமண விழாவில் சந்தித்துக்கொள்ளும் ஹீரோ-ஹீரோயின் இருவருக்குமிடையே காதல் மலர்வது போன்று உருவாக்கபபட்டுள்ள அந்த காட்சிகளின் பின்னணியில் இந்த புத்தம் புது காலை பாடல்தான் இணைக்கப்பட்டுள்ளது. ஆக, மான்டேஜ் சாங்காக அந்த பாடலை மீண்டும் ஒலிக்க வைத்துள்ளனர்.
இந்த பாடலில் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் இன்னொரு ஹீரோவாக நடித்த அஸ்வின் மற்றும் நடிகை ஸ்ருஷ்டி தாங்கே ஆகிய இருவரும் இணைத்து நடித்துள்ளனர்.