போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ஆடுகளம் படத்தில் அறிமுகமான வெள்ளாவி பொண்ணு இந்த டாப்ஸி பன்னு. பெரிய ரவுண்ட் வருவார் என்று கணிக்கப்பட்டவர் நடித்ததை விட சர்ச்சையில் சிக்கியதுதான் அதிகம். ஆரம்பம் படத்திற்கு பிறகு தற்போது வை ராஜா வை, கதை திரைக்கதை வசனம் இயக்கம் படங்களில் கவுரவ தோற்றத்தில் நடித்து வருகிறார். ஏன் இப்படி என்று கேட்டால் இப்படி பதில் சொல்கிறார்.
சோலோ ஹீரோயினாத்தான் நடிப்பேன்னு பிடிவாதமா இருந்தால் இங்கு பெருசா இடம் கிடைக்காது. பத்து நிமிட கேரக்டர்ல சாதிச்சவங்க இருக்காங்க. நல்ல கம்பெனி, நல்ல கதை கூட நடிக்கிறவங்க சரியா இருந்தால் ரொம்ப சின்ன கேரக்டர்லகூட நடிக்கலாம். நடிப்புங்றது ஒரு தொழில், அதுல எங்கெல்லாம் நல்ல சான்ஸ் கிடைக்குதோ அதை யூஸ் பண்ணிக்க வேண்டியதுதான். அப்படித்தான் நடிப்பேன், இப்படித்தான் நடிப்பேன்னு சொல்றதுக்கு என்ன இருக்கு. முனி-3யில் ஹீரோயினா நடிக்கிறேன். ரன்னிங்சாதி டாட் காம்ங்ற இந்திப் படத்துல நடிக்கிறேன். அவை வெற்றி பெறும்போது சோலோ ஹீரோயின் சான்ஸ் தானா தேடிவரப்போகுது என்கிறார் டாப்ஸி.