‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சித்தார்த், லட்சுமிமேனன் நடித்துள்ள ஜிகிர்தண்டா படத்தை பீட்சா கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்துள்ளார். படத்தின் சில காட்சிகளை நீக்குவது தொடர்பாக இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே நடந்த கருத்து மோதலால் படம் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டது. அதன் பிறகு அந்த பிரச்னையில் முடிவு எட்டப்பட்டு நேற்று (ஜூலை 25) படம் வெளிவருவதாக இருந்தது.
இந்த நிலையில் படத்தின் வெளியீட்டை ஆகஸ்ட் 1ந் தேதிக்கு தள்ளி வைத்தார் தயாரிப்பாளர் கதிரேசன். இதுபற்றி தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்த சித்தார்த் "என்னை கேட்காமல் தயாரிப்பாளர் படத்தை தள்ளி வைத்துள்ளார்" என்று தயாரிப்பாளரை கடுமையாக விமர்சித்தார். இதுபற்றி தயாரிப்பாளர் கதிரேசன் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டார். இதையொட்டி தயாரிப்பாளர் சங்கம் சித்தார்த்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வாரம்தோறும் மூன்று, நான்கு படங்கள் வெளிவரும்போது வியாபார ரீதியாக தயாரிப்பாளருக்கு பல பிரச்னைகள் வரும். சினிமா வியாபார பிரச்னைகள் நடிகர்களுக்குத் தெரியாது. அந்த பிரச்னைகளை சமாளித்துதான் படத்தை ரிலீஸ் பண்ண வேண்டியது இருக்கிறது. படத்தில் நடித்தற்கான முழு சம்பளத்தையும் பெற்றக் கொண்ட சித்தார்த், வெளியீட்டு தேதியில் தலையிட எந்த உரிமையும் இல்லை. சித்தார்த்தின் இந்த செயலுக்கு தயாரிப்பாளர் சங்கம் கண்டனம் தெரிவிக்கிறது.
என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் கதிரேசன் விடுத்துள்ள அறிக்கையில் "தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கத்தான் படத்தை ஒருவாரம் தள்ளி வைத்தேன். படம் என் குழந்தை, என் குழந்தையை நானே கொல்வேனா? இது எப்படி சித்தார்த்துக்கு புரியாமல் போனது" என்று கூறியுள்ளார்.