போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
சமீபகாலமாக நாட்டில் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதால், பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களான ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகள் எப்போதுமே பாதுகாப்பு வளையத்திற்குள்தான் இருக்கின்றன. அதனால் அங்கு சென்று வரும் நபர்கள், போலீசாரின் தீவிர கண்காணிப்புக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அதிலும், யார் மீதாவது சந்தேகம் வந்து விட்டால் அவர்களை துருவி துருவி விசாரித்த பின்னரே விடுவிக்கின்றனர். இப்படிப்பட்ட கெடுபிடியில் நேற்று நடிகை த்ரிஷாவும் போலீசாரின் விசாரணைக்குள் சிக்கியிருக்கிறார். அதாவது, நேற்றைய தினம் ஐதராபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார் த்ரிஷா.
அப்போது, ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட் அணிந்திருந்த த்ரிஷா பெரிய அளவில் ஒரு கூலிங் கிளாஸ் கண்ணாடியை அணிந்திருந்தாராம். இதனால் சுத்தமாக அவர் ஆள் அடையாளமே தெரியாமல் இருந்தாராம். விஐபி பயணிகள் விமானத்துக்காக காத்திருக்கும் பகுதியில் நீண்டநேரமாக த்ரிஷா அமர்ந்திருந்ததை கண்காணித்த சில போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரித்தார்களாம்.
அப்போது தனக்கான அடையாள அட்டை அவர்களிடம் எடுத்து காண்பித்தாராம் த்ரிஷா. அதையடுத்தே அவர் நடிகை த்ரிஷா என்பது அவர்களுக்கு தெரியவந்திருக்கிறது. பின்னர் பாதுகாப்பு கருதியே தாங்கள் இந்த விசாரணையில் ஈடுபட்டதாக அவர்கள் சொல்ல, நீங்கள் உங்கள் கடமையைத்தானே செய்தீர்கள் என்று சிரித்துக்கொண்டே அவர்களிடமிருந்து விடைபெற்றாராம் த்ரிஷா.